"உடனிருந்த உத்தமத்தம்பி லட்சுமணன்"
வசந்த வாசல் - பன்னாட்டுக் கவியரங்கம்
(கம்பன் காட்டிய காப்பிய மாந்தர்கள்)
இணைய வழி - 26.12.2021, ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு
அமெரிக்கா - நேரம்: காலை 6.00 மணிக்கு
(1)
இராம அவதாரக் காப்பியத் தேரில்
இராமன் தம்பி இலக்குவன் இலக்குவன்
இராமனின் அடிபணிந்துத் தான்சேவை ஆற்றிட
இராம இலக்குவன் சகோதர மகிமையே!
(2)
இராமன் நிழலாய் தம்பி இலக்குவன்
இராமன் காட்டிற்குச் சென்றபோதும் நீங்காமல்
ராமன் கைத்தலம் பற்றியபோதும் நீங்காமல்
ராமன் சீதாராமன் என்றுதன் பிறவிவாழ்ந்தே!
(3)
தந்தை தசரதர் தாயவள் சுமித்ரா
தன்னுடன் பிறந்தோர் பரதன் சத்ருகனன்
தன்னுயிர் மனையாள் ஊர்மிளா நல்லுணவு
தன்சுகம் நித்திரை துறந்தான் இலக்குவனே!
(4)
அரக்கர் குலத்தை அழித்த இராமனின்
பரம்வீர வெற்றிக்கு காவலனாய் லங்கா
அரக்கிச் சூர்ப்பனகை மூக்கரிந்து இந்த்ரஜித்
சிரத்தை வீழ்த்தி இதிகாசம் தான்பதிந்தாரே!
(5)
இக்கோடு தாண்டாதே ஆபத்து நேருமென
அக்கறைக் கொண்டன்றுச் சீதைக்கு எல்லைச்சுட்டி
எக்கரைக் கடக்கவும் அண்ணனுக்கு நற்துணையாகி
தக்கநேரம் மாயமான் அஃதென்றுக் காத்தாரே!
(6)
முடிவில் மறுவுயிர்ப் பெற்ற இலக்குவன்
முடிசூடும் ராமனின் பட்டாபிஷேகம் வாழ்த்தி
முடிந்த இன்பமாய் கவரிவீசக் காப்பிய
முடிப்புகழ் உடனிருந்த உத்தமத் தம்பியடைந்தே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 25.12.2021.
முத்தமிழ் மாலை
Wednesday, March 9, 2022
இணைய வர்த்தகச் சந்தை!
வசந்த வாசல் கவிமன்றம், தொகுப்பு மலர் சார்பு.(1)
சின்னச் சின்னப் பொருட்கள் வாங்க
சந்துப் பொந்துக் கடைகள்
தேடித்தேடி சுற்றுதல் வேண்டாம்
தேவைக்கு மின்கணினி கட்டளை
வரவேற்று வர்த்தகம் செய்வோர்
வேண்டியப் பொருளை
வேண்டும் நபர்கள் இருக்கும்
இடமே கொண்டுச் சேர்க்கும் சந்தையே!
(2)
வாசிக்கும் நூல்முதல் மளிகை வகைகள்
விதவிதக் காய்கனி அணிமணிகள்
நம்ம வீட்டு இல்சமையல்
நாட்டில் உள்ள எச்சுவையும்
நம்மூரில் உள்ளோர் வாங்கி
நலமுற வளமுறப் பயனுற
சுவைத்துப் பெற்று மேன்மகிழச்
சேர்க்கும் இணைய வர்த்தகச் சந்தையே!
(3)
நோய்ப்பிணி வாட்டியக் காலத்தும் நாணய
நம்பிக்கைச் சேவை விரைந்து
கேட்கும் மக்களுக்கு நல்கி
கடைவீதி வாயிலில் கூடாமல்
கொல்நோய் தொற்றுப் பரவாமல்
காத்து வாகையில் பங்காற்றி
இற்றை வழியில்
இணையத் தனஞ்சேர் வர்த்தகச் சந்தையே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, 11.12.2021.
Saturday, November 13, 2021
சூழ்ச்சி வலைகளில் சுற்றுச்சூழல்!
(டெல்லி தமிழ் இலக்கிய மன்றம்,அமெரிக்க தொலைக்காட்சி, கோவை வசந்த வாசல்
கவிமன்றம், 42 நாடுகளின் தமிழ்மொழி அமைப்புகள்)
(10.11.2021 - புதன் மாலை 5.00 மணிக்கு நிகழ்ச்சி)
(1)
ஐப்பசி மழையில் அருமை! நற்தலைப்பு!
அன்பே! விபத்தில் வீழாமல் இல்சேர்வோம்!
வல்லரசார் மேலரங்கில் இந்தியா தமிழ்நாடு
வல்லமைப் படைக்க உள்ளரங்கு உள்நிலை
வளர்ச்சி மாற்றம் திட்டமென கைகள்மாறி
உற்சாகம் ஊண்உடை உறைவிடம் தரும்இயற்கை
ஊறாகி வீழஉயிர்கள் வாழுமிடம் கீழித்தரமாகி
ஊட்டக்காற்று சுற்றுச்சூழல் கேடாகச் சூழ்ச்சிவலையே!
(2)
அய்யகோ! கருமமே! உயிர்கள் நிலைப்பது
அனலில் விழுந்தப் புழுவின் நிலையே
அனுதினம் தப்பிப் பிழைத்து வாழ்வது
அச்சம் உச்சம் எங்கும் எங்கெங்கும்
இன்பம் துன்பம் காலம் அறியாமல்
இச்சை மனிதனோ சொத்துகள் குவிக்க
மலக்கழிவு சாக்கடை குடிநீர்க் குழாயுடைய
மேல்நடக்கும் கல்விமான் போதைக்குடிமான் நாறுதற்போலே!
(3)
வாய்விடும் புகையோ வாகனக் கரும்புகையோ
வான்வெளியை மாசுப்படுத்த மாஅழிவே! மாஅழிவே!
நீர்நிலைகள் தூர்வாரித் தூநதிகள் ஒன்றிணைத்து
நீளுலகு வாழ்வின்றேல் பேரிடரே! பேரிடரே!
சுத்தம் அசுத்தம் பாராமல் தூய்மைக்கேடு
செய்வோரைத் தண்டிக்காமல் குற்றங் குற்றமே!
பசுமரங்கள் வெட்டிவீழ்த்திப் பால்தரும் பசுக்கள்
பதிமடியச் செவ்வாய்க் கிரகம்பாய்தல் சூழ்ச்சிவலையே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, 10.11.2021,கோவை.
குழந்தைகள் தினவிழா!
( 24 அடிகள் - நிலைமண்டில ஆசிரியப்பா)(வசந்த வாசல் கவிமன்றம், கோவை, 14.11.2021)
(சிறப்பு: 14.11.2021 - நேரு பிறந்த நாள், குழந்தைகள் தினம்)
ஆண்டுதோறும் பள்ளியில் வண்ணத் தினவிழா
ஆடல்பாடல் கட்டுரைக் கதைக்கவிதை போட்டிகள்
ஆசைமாமா நேருவின் வேடமணிந்து ரோஜாதந்து
ஆவலாய் குழந்தைகள் நேருமாமா அங்கிபோலே
தானணிந்து மாறுவேடப் போட்டியில் பங்கேற்றுத்
தான்வெல்ல நல்லுலக வெற்றியாய் முழங்குவர்
ஆம்அவர்கள் பிள்ளையர் நம்மைப்போல் ஒன்றுகூடி
ஆய்ந்துப் படைக்கப் படைப்போம் நற்கவிதையே! (8 அடி)
நம்நாடு மேல்நாடு யாவுமே கொரோனா
நோயை வென்றுமீள நல்லொழுக்கம் நற்பழக்கம்
நம்முள் மீண்டும் மீண்டும் மலர
நன்னாள் பொன்னாள் இன்னாள் இன்னாள்
நாமெல்லாம் பிள்ளைகள் போலே இணைவோம்
நாமெல்லாம் பிள்ளைகள் போலே இணைவோம்
பாரில் பிள்ளைகள் இன்புறவே ஆக்குவோம்
போதுமே! மேன்மயம்! மெய்மரபுச் சொல்லிக்கொடுத்தே! (16 அடி)
கற்றலில் விதைத்தால் பசுமரத் தாணியாம்
கல்விக் கூடத்தில் குப்பைகள் சேர்க்காமல்
பிஞ்சுகள் மனதில் பாலினக் கொடுமைப்
புகட்டாமல் பால்மனதில் நச்சுவிடம் ஊட்டாமல்
கேடுசெய் ஆசிரியர்கள் நீக்கிநல் ஞானம்
கொண்டோர் அறஞ்செய் கோவில்போல் மாற்றுவோம்
ரோஜா மலர்கள் நாளைய வாழ்வில்
ராஜா போல்நாட்டைக் காக்கநேர்! கொண்டாடுவீரே! (24 அடி)
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 13.11.2021.
Thursday, October 28, 2021
இந்தியச் சுதந்திர தினவிழா வாழ்த்துப்பா
(75- ஆம் ஆண்டு - 15 ஆகஸ்ட் 2021)(வசந்த வாசல் கவிமன்றம் - இணையவழி - 8.8.2021)
(பல்லவி)
பாரில் பாரில் முன்னேறு
பாரதம் போலே முன்னேறு
(அனுபல்லவி)
வானில் வலம்வரும் சூரியன்போல்
வான்புகழ் வல்லரசு நாட்டிலே (பாரில்...)
(சரணம் 1)
பாரதக் கொடியின் வண்ணம்போல்
பாரின மக்கள் கலந்தாடி
பசுமை பாரதம் காப்போம்
புண்ணிய நதிகள் இணைப்போம்
(சரணம் 2)
அடிமைப் பட்டதோ அக்காலம்
அனைத்தும் தொழில்நுட்பம் இக்காலம்
அன்பெனும் ஆயுதக் கொடியேந்தி
அவனியில் வாழ்வோம் பல்லாண்டு.... (பாரில்....)
(சரணம் 3)
எழுபத்து ஐந்தாம் ஆண்டிலே
எங்கள் சுதந்திரம் அம்ரூத்
எழுவீர் உற்சவம் கொண்டாடி
எதிலும் பரணிப் புகழ்பாடி (பாரில்....)
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வாழ்க சுதந்திரம் வாழ்க இந்தியா
வாழ்க பாரதத் தாயின் மணிக்கொடியே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை.
விஞ்ஞான வித்தகர் அப்துல் கலாம்!
(காலம்: 15.10.1931 - 27.07.2015)
வசந்த வாசல் கவிமன்றம்
27.09.2021 : (வஞ்சிப்பா)
(1)
ஜைனுலாப்தீன் ஆஷியம்மா பெற்றெடுத்த
செல்லமகனார் ஏ.பி. ஜே அப்துல்கலாம்
ஏழ்மையில் இசுலாமியர் ஏறுபோல்
ஏழுகடல் ஏழுமலை எழிற்பூமி
யாவையும் வாழ்த்தத் தமிழ்நாடுய
இராமேஸ்வரம் தலத்தில் பிறந்தார்
செய்தித்தாள் விநியோகம் செய்தவர்
செய்திட்ட நற்பணியால் வித்தகராகவே!
(2)
இயற்பியல், விண்வெளிப் பொறியியல்
இன்னபிற கல்விமுறைப் பட்டங்கள்
அறிவுமொழி கவிதைநூல்கள் ஆக்கிப்பொக்ரான்
அணுநுட்பம் ஆய்ந்துத்துணைக் கோள்ஏவுகணை
செலுத்திநல் விஞ்ஞானியாக இந்தியராணுவச்
சாதனையர் ராக்கெட்டின் பிதாவாகப்
போற்றப்பட பத்மபூஷண் பாரத்ரத்னா
போன்றவிருது பெற்றுத்திறனால் தலைவராகியே!
(3)
அகிலத்தார் போற்றிய ஜனாதிபதி
அன்னைப் பூமியில் தந்தையாய்
திருமண வாழ்க்கைத் துறந்துபீஷ்மத்
தமிழ்க்குரு போல்தனியராய் இளையர்கள்
உற்சாகம் வளர்த்துநாடு வல்லரசாக
வான்தொடும் கனவுகளை காணச்சொல்லி
விமானட்ரோன் துப்பறிஞானம் விஞ்ஞானமென
விரிவுரைகள் ஆற்றும்போது வான்கலந்தாரே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 24.09.2021.
தேடினால் கிடைக்கும் செல்வங்கள்!
1. தேனமுதத் தமிழ்ச் சங்கம் - மயிலாடுதுறை
2. தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி - அமெரிக்கா
3. வசந்த வாசல் கவிமன்றம் - கோவை
இணைந்து வழங்கிய நிகழ்ச்சி :- ஆசிரிய விருத்தம் (எண் சீர்)
( 24.10.2021, ஞாயிறு, மாலை 5.00 மணி)
(1)
எத்தனைக் கோடிமக்கள் இவ்வுலக நாட்டிலே
வறியோர் தனவான் நடுத்தரம் என்றே
எத்தனைப் பிரிவுகள் வாழும் வாழ்விலே
நானிலர் வாழும் சமுதாயக் கூட்டிலே
எத்தகுக் கல்விநுட்பம் எங்குப் பயனோ
எங்கும் தேடித்தேடி வாழ்க்கைப் பயணம்
எத்திசைப் பணியோ அத்திசையிற் செல்வம்
குடும்பம் சொந்தம் பந்தம் வாழ்த்தியே!
(2)
நித்தம் நித்தம் உண்டு உறங்கும்
நிலையா உயிர்கள் மத்தியில் மனிதராய்
எத்தவம் செய்தோம் செல்வங்கள் தேடிடப்
பதினாறுச் செல்வமும் பெற்று வாழவே
புத்தியும் சக்தியும் நாளும் கேட்கிறோம்
புண்ணியக் கடவுள்முன் சத்தியஐக் கரங்கூப்பி
புத்தம் சீக்கியம் இசுலாம் கிறிஸ்தவம்
இந்து எனமதத்தார் யாரும் கூடிவுழைத்தே!
(3)
தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீயன ஒதுக்கிடு; அல்லும்பகலும் ஈட்டிடு
எதுதான் வரினும் அச்சம் தவிர்த்திடு
என்றோ ஒருநாள் வெல்வோம் நிச்சயம்
இதுதான் வேண்டுமென வஞ்சித்துக் கொன்றுக்
களவாடிக் கூர்ச்சொல்லால் துன்புறுத்திக் கொய்வதேன்
எதுவும் கிடைக்கப் பாவம் புரியாமல்
சத்திய நியதியில் தேடியடைவோம் செல்வமே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 22.10.2021.
(காலம்: 15.10.1931 - 27.07.2015)
வசந்த வாசல் கவிமன்றம்
27.09.2021 : (வஞ்சிப்பா)
(1)
ஜைனுலாப்தீன் ஆஷியம்மா பெற்றெடுத்த
செல்லமகனார் ஏ.பி. ஜே அப்துல்கலாம்
ஏழ்மையில் இசுலாமியர் ஏறுபோல்
ஏழுகடல் ஏழுமலை எழிற்பூமி
யாவையும் வாழ்த்தத் தமிழ்நாடுய
இராமேஸ்வரம் தலத்தில் பிறந்தார்
செய்தித்தாள் விநியோகம் செய்தவர்
செய்திட்ட நற்பணியால் வித்தகராகவே!
(2)
இயற்பியல், விண்வெளிப் பொறியியல்
இன்னபிற கல்விமுறைப் பட்டங்கள்
அறிவுமொழி கவிதைநூல்கள் ஆக்கிப்பொக்ரான்
அணுநுட்பம் ஆய்ந்துத்துணைக் கோள்ஏவுகணை
செலுத்திநல் விஞ்ஞானியாக இந்தியராணுவச்
சாதனையர் ராக்கெட்டின் பிதாவாகப்
போற்றப்பட பத்மபூஷண் பாரத்ரத்னா
போன்றவிருது பெற்றுத்திறனால் தலைவராகியே!
(3)
அகிலத்தார் போற்றிய ஜனாதிபதி
அன்னைப் பூமியில் தந்தையாய்
திருமண வாழ்க்கைத் துறந்துபீஷ்மத்
தமிழ்க்குரு போல்தனியராய் இளையர்கள்
உற்சாகம் வளர்த்துநாடு வல்லரசாக
வான்தொடும் கனவுகளை காணச்சொல்லி
விமானட்ரோன் துப்பறிஞானம் விஞ்ஞானமென
விரிவுரைகள் ஆற்றும்போது வான்கலந்தாரே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 24.09.2021.
தேடினால் கிடைக்கும் செல்வங்கள்!
1. தேனமுதத் தமிழ்ச் சங்கம் - மயிலாடுதுறை
2. தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி - அமெரிக்கா
3. வசந்த வாசல் கவிமன்றம் - கோவை
இணைந்து வழங்கிய நிகழ்ச்சி :- ஆசிரிய விருத்தம் (எண் சீர்)
( 24.10.2021, ஞாயிறு, மாலை 5.00 மணி)
(1)
எத்தனைக் கோடிமக்கள் இவ்வுலக நாட்டிலே
வறியோர் தனவான் நடுத்தரம் என்றே
எத்தனைப் பிரிவுகள் வாழும் வாழ்விலே
நானிலர் வாழும் சமுதாயக் கூட்டிலே
எத்தகுக் கல்விநுட்பம் எங்குப் பயனோ
எங்கும் தேடித்தேடி வாழ்க்கைப் பயணம்
எத்திசைப் பணியோ அத்திசையிற் செல்வம்
குடும்பம் சொந்தம் பந்தம் வாழ்த்தியே!
(2)
நித்தம் நித்தம் உண்டு உறங்கும்
நிலையா உயிர்கள் மத்தியில் மனிதராய்
எத்தவம் செய்தோம் செல்வங்கள் தேடிடப்
பதினாறுச் செல்வமும் பெற்று வாழவே
புத்தியும் சக்தியும் நாளும் கேட்கிறோம்
புண்ணியக் கடவுள்முன் சத்தியஐக் கரங்கூப்பி
புத்தம் சீக்கியம் இசுலாம் கிறிஸ்தவம்
இந்து எனமதத்தார் யாரும் கூடிவுழைத்தே!
(3)
தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீயன ஒதுக்கிடு; அல்லும்பகலும் ஈட்டிடு
எதுதான் வரினும் அச்சம் தவிர்த்திடு
என்றோ ஒருநாள் வெல்வோம் நிச்சயம்
இதுதான் வேண்டுமென வஞ்சித்துக் கொன்றுக்
களவாடிக் கூர்ச்சொல்லால் துன்புறுத்திக் கொய்வதேன்
எதுவும் கிடைக்கப் பாவம் புரியாமல்
சத்திய நியதியில் தேடியடைவோம் செல்வமே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 22.10.2021.
Monday, July 5, 2021
குறள்தந்த குறைவில்லா வாழ்க்கை!
அதிகாரம் 100: பண்புடைமை: கருப்பொருள்: பண்புபேரூர் ஆதீனம் : இணையவழி வாசந்தவாசல் தொடர்பு 1
நாள்: 16.06.2021.
(1) நாட்டில்
இந்தியாவில் இந்தியர் வாழ்வரா அல்லது
இன்னல் விளைக்கும் மேலையர் வாழ்வரா
தலைவாசல் பற்பலதேசம் மூடித்தாமே அச்சுறுத்த
தர்மமொழி முன்பகன்று வெந்தப்பின் வேலாகச்
செப்பினர் இடைவெளி, முகக்கவசம், மக்களுக்குள்
சந்தித்தல், பேசுதல் , ஒன்றுகூடிப் போராடல்
போன்றன நீங்கினால் நோய்க்கொரோனா வாராது
பின்பற்ற மேல்மறுத்தால் வைரஸ்தொற்று வந்திடுமென்றே!
(2) நுட்ப வளர்ச்சியில்
மாவுறுதி மத்தியில் பண்புடைமைச் சிந்தையில்
முன்னோர்கள் தாம்போராடி வென்றே சுதந்திரம்
எந்தவளம் இல்லை கண்டீர் ஏனோ
எழில்வளம் சுட்டெரித்துக் காண்கிறோம் வளர்ச்சி
தேசமெங்கும் சுற்றிச்சுற்றி தோழமைப் போற்றிநம்
தேசப்பற்று நம்மரபு ஒற்றுமை மாவொழுக்கம்
யாவையும் மேல்தொழில் நுட்பத்தில் தேய்த்து
யாவரும் நலம்வாழ நல்லுரை யாற்றிவிதைத்தே!
(3) இல்வாழ்வில்
நல்லபால் தன்சுவைக் கெட்டாற்போல வல்லுடல்
நற்சுவை நாட்டார் இழந்துமேல் பொய்யும்
புரட்டும் புகழ்மிக்க ஆடம்பரமா வாழ்வும்
புற்றென அழிக்கும் வன்மை வுணர்வும்
விதைத்துப் பிறருடன் கலந்துப் பழகும்
வளமான வாழ்க்கைப் பண்புமுறைச் சிதைத்து
ஒளியான சந்ததியர் நற்பகலிருந்தும் துன்யிருளில்
ஓரங் கிடப்பதாய் குறைவில்லா வாழ்க்கையே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 14.6.2021.
Wednesday, June 30, 2021
எதிர்நீச்சலாய் தடுப்பூசியே!
(இரண்டாம் அலையின் முடிவில் வைரஸ் கொரோனா!)சீனநாடு ஊஹானில் உருவாகிய
சீரழிக்கும் வைரஸ்நோய் கொரோனா
முதலலை இரண்டாம் அலையென
முட்டிமோதி உருமாற்றி மக்களை
உருக்குலையச் செய்ததுப் போதாமல்
உருமாறி மூன்றாம் அலைக்கு
எச்சரிக்கை
உண்டாக்கத் தீய்ந்துப் போனமக்கள்
உச்சமாய் தடுப்பூசித் திட்டத்திற்கு ஒப்பினரே!
(2)
கோவாக்சின் கோவிஷீல்டு ஸ்புட்னிக் - வி
கொரோனா நோய்எதிர்ப்பு தடுப்பூசியாய்
செயல்பட ஏற்றுமதி இறக்குமதி
செய்துநாடு நகர்வுலகு எங்கெங்கும்
தடுப்பூசிகள் பயனளிக்க இயல்புநிலைத்
திருப்பங்கள் மீண்டும் வலம்வர
அரசினர்
நலப்பணியாம் நற்பொருள் வழங்கல்
நலநிதி வழங்கல் யாவும் நலஞ்சேர்த்தே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 28.06.2021.
Subscribe to:
Posts (Atom)