Friday, October 29, 2010

'மணல் வீடுகள்'

சுடர்மிகு அறிவுடைச் சிறுவனாக
சிறுமியர் குழுவுடன் விளையாடி
மணலில் கட்டியக் கோட்டை
மனதில் பதிந்துக் கனிந்தது!

துள்ளல் நடையில் தோட்டமிட்டு
துளசிச் செடியாய் நிமிரவே
தொழில் நகரம் குடிபுகுந்து
திரவிய வீடுகள் கிடைத்தது!

கட்டிட மேலாளர் வேலையில்
கலந்த மண்ணாக உழைத்து
கரைசல் செம்மண் சாயத்தை
கலவை வடிவில் தெளித்தது!

குறுக்குப் பேட்டை அடுக்குமாடி
குற்றால வீழ்ச்சித் தடுப்புகள்
அக்கறை நீரோடை அணைகள்
அளவிலா அற்புதம் படைத்தது!

ஆசைகள் கடந்தும் பயிலவே
ஆர்வலர் ஓவியப் போட்டியில்
கண்ணாடி மீதினில் காட்சியாக
கடுந்தவப் பரிசுகள் குவித்தது!

இளமை வென்றுத் திரும்பவே
இருதய வலியைப் பொறுத்து
தனிமை வெறுமை போரிலே
தண்ணீர் அலையில் கரைந்தது!!
-அகிலமணி ஸ்ரீவித்யா, 13/10/2010.