Monday, July 5, 2021

 குறள்தந்த குறைவில்லா வாழ்க்கை!

அதிகாரம் 100: பண்புடைமை: கருப்பொருள்: பண்பு
பேரூர் ஆதீனம் : இணையவழி வாசந்தவாசல் தொடர்பு 1
நாள்: 16.06.2021.

(1) நாட்டில்

இந்தியாவில் இந்தியர் வாழ்வரா அல்லது
இன்னல் விளைக்கும் மேலையர் வாழ்வரா
தலைவாசல் பற்பலதேசம் மூடித்தாமே அச்சுறுத்த
தர்மமொழி முன்பகன்று வெந்தப்பின் வேலாகச்
செப்பினர் இடைவெளி, முகக்கவசம், மக்களுக்குள்
சந்தித்தல், பேசுதல் , ஒன்றுகூடிப் போராடல்
போன்றன நீங்கினால் நோய்க்கொரோனா வாராது
பின்பற்ற மேல்மறுத்தால் வைரஸ்தொற்று வந்திடுமென்றே!

(2) நுட்ப வளர்ச்சியில்

மாவுறுதி மத்தியில் பண்புடைமைச் சிந்தையில்
முன்னோர்கள் தாம்போராடி வென்றே சுதந்திரம்
எந்தவளம் இல்லை கண்டீர் ஏனோ
எழில்வளம் சுட்டெரித்துக் காண்கிறோம் வளர்ச்சி
தேசமெங்கும் சுற்றிச்சுற்றி தோழமைப் போற்றிநம்
தேசப்பற்று நம்மரபு ஒற்றுமை மாவொழுக்கம்
யாவையும் மேல்தொழில் நுட்பத்தில் தேய்த்து
யாவரும் நலம்வாழ நல்லுரை யாற்றிவிதைத்தே!

(3) இல்வாழ்வில்

நல்லபால் தன்சுவைக் கெட்டாற்போல வல்லுடல்
நற்சுவை நாட்டார் இழந்துமேல் பொய்யும்
புரட்டும் புகழ்மிக்க ஆடம்பரமா வாழ்வும்
புற்றென அழிக்கும் வன்மை வுணர்வும்
விதைத்துப் பிறருடன் கலந்துப் பழகும்
வளமான வாழ்க்கைப் பண்புமுறைச் சிதைத்து
ஒளியான சந்ததியர் நற்பகலிருந்தும் துன்யிருளில்
ஓரங் கிடப்பதாய் குறைவில்லா வாழ்க்கையே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 14.6.2021.