அதோ வருகிறான் பாரதி!
பாரதி பாரதி பாரதி - பாரினில்
பாரதம் வென்றவர் பாரதி
பாரதி கண்ட
கனவுகள் யாவும்
நவயுகந் தன்னில் நிகழ
அவனே கதிகதி
சாரதி சாரதி பூமியில்
நானிலர் யாருமே பாருதி - பாரதமே! (8-அடி)
பேரொளி பேரொளி பாருளே - பாவொலி
பேச்சிலே மூச்சிலே பாரதி
பூத்தன பூவினம் பூமியில்
பூத்தெழு பூக்கள் புரட்சியே
பெண்கல்விப் பெற்றனர்
பார்மேல் வுலவினர்
ஞானக்கோள் கண்டங் கடந்தே
நிதியருட் பறவைப்போல் ஆகினர் - ஆகினரே!
(16- அடி)
தோம்தோம் வியந்தோம் கவிமதி - மேலோர்
தேசமே விஞ்சுவோம் பாரதி
வாழுங் கவித்தேன் சுவைநதி
வாழ்வாய் வருகிறான்
பாரதி பாரதி
சத்தியம் காப்பான் சகமினி
வல்லரசுக் காண்கவே பாரதி
நல்நாடு நம்வசந்தம் யில்வறுமை - ஆகியதே!
(24-அடி)
-கவிதாயினி அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை.