எதிர்நீச்சலாய் தடுப்பூசியே!
(இரண்டாம் அலையின் முடிவில் வைரஸ் கொரோனா!)சீனநாடு ஊஹானில் உருவாகிய
சீரழிக்கும் வைரஸ்நோய் கொரோனா
முதலலை இரண்டாம் அலையென
முட்டிமோதி உருமாற்றி மக்களை
உருக்குலையச் செய்ததுப் போதாமல்
உருமாறி மூன்றாம் அலைக்கு
எச்சரிக்கை
உண்டாக்கத் தீய்ந்துப் போனமக்கள்
உச்சமாய் தடுப்பூசித் திட்டத்திற்கு ஒப்பினரே!
(2)
கோவாக்சின் கோவிஷீல்டு ஸ்புட்னிக் - வி
கொரோனா நோய்எதிர்ப்பு தடுப்பூசியாய்
செயல்பட ஏற்றுமதி இறக்குமதி
செய்துநாடு நகர்வுலகு எங்கெங்கும்
தடுப்பூசிகள் பயனளிக்க இயல்புநிலைத்
திருப்பங்கள் மீண்டும் வலம்வர
அரசினர்
நலப்பணியாம் நற்பொருள் வழங்கல்
நலநிதி வழங்கல் யாவும் நலஞ்சேர்த்தே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 28.06.2021.