Saturday, November 13, 2021

 சூழ்ச்சி வலைகளில் சுற்றுச்சூழல்!

(டெல்லி தமிழ் இலக்கிய மன்றம்,
அமெரிக்க தொலைக்காட்சி, கோவை வசந்த வாசல்
கவிமன்றம், 42 நாடுகளின்  தமிழ்மொழி அமைப்புகள்)
(10.11.2021 - புதன் மாலை 5.00 மணிக்கு நிகழ்ச்சி)


                         (1)

ஐப்பசி மழையில் அருமை! நற்தலைப்பு!
அன்பே! விபத்தில் வீழாமல் இல்சேர்வோம்!
வல்லரசார் மேலரங்கில் இந்தியா தமிழ்நாடு
வல்லமைப் படைக்க உள்ளரங்கு உள்நிலை
வளர்ச்சி மாற்றம் திட்டமென கைகள்மாறி
உற்சாகம்  ஊண்உடை  உறைவிடம் தரும்இயற்கை
ஊறாகி வீழஉயிர்கள் வாழுமிடம் கீழித்தரமாகி
ஊட்டக்காற்று சுற்றுச்சூழல் கேடாகச் சூழ்ச்சிவலையே!

                            (2)

அய்யகோ!  கருமமே! உயிர்கள்  நிலைப்பது
அனலில் விழுந்தப் புழுவின் நிலையே
அனுதினம் தப்பிப் பிழைத்து வாழ்வது
அச்சம் உச்சம் எங்கும் எங்கெங்கும்
இன்பம்  துன்பம் காலம் அறியாமல்
இச்சை மனிதனோ சொத்துகள் குவிக்க
மலக்கழிவு சாக்கடை குடிநீர்க் குழாயுடைய
மேல்நடக்கும் கல்விமான் போதைக்குடிமான் நாறுதற்போலே!

                            (3)

வாய்விடும் புகையோ வாகனக் கரும்புகையோ
வான்வெளியை மாசுப்படுத்த மாஅழிவே! மாஅழிவே!
நீர்நிலைகள் தூர்வாரித் தூநதிகள்  ஒன்றிணைத்து
நீளுலகு வாழ்வின்றேல் பேரிடரே!  பேரிடரே!
சுத்தம் அசுத்தம் பாராமல் தூய்மைக்கேடு
செய்வோரைத் தண்டிக்காமல் குற்றங் குற்றமே!
பசுமரங்கள் வெட்டிவீழ்த்திப் பால்தரும் பசுக்கள்
பதிமடியச்  செவ்வாய்க் கிரகம்பாய்தல் சூழ்ச்சிவலையே!
      - சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா,  10.11.2021,கோவை.

                    குழந்தைகள் தினவிழா!

                            ( 24 அடிகள் - நிலைமண்டில ஆசிரியப்பா)
              (வசந்த வாசல் கவிமன்றம், கோவை, 14.11.2021)
            (சிறப்பு: 14.11.2021 - நேரு பிறந்த நாள், குழந்தைகள் தினம்)

ஆண்டுதோறும்  பள்ளியில் வண்ணத் தினவிழா
ஆடல்பாடல்  கட்டுரைக் கதைக்கவிதை போட்டிகள்
ஆசைமாமா நேருவின் வேடமணிந்து ரோஜாதந்து
ஆவலாய் குழந்தைகள் நேருமாமா அங்கிபோலே
தானணிந்து மாறுவேடப் போட்டியில் பங்கேற்றுத்
தான்வெல்ல நல்லுலக வெற்றியாய் முழங்குவர்
ஆம்அவர்கள் பிள்ளையர்  நம்மைப்போல் ஒன்றுகூடி 
ஆய்ந்துப் படைக்கப் படைப்போம் நற்கவிதையே!             (8 அடி)

நம்நாடு மேல்நாடு யாவுமே கொரோனா
நோயை வென்றுமீள நல்லொழுக்கம் நற்பழக்கம்
நம்முள் மீண்டும் மீண்டும் மலர
நன்னாள் பொன்னாள் இன்னாள் இன்னாள்
நாமெல்லாம் பிள்ளைகள் போலே இணைவோம்
நாமெல்லாம் பிள்ளைகள் போலே இணைவோம்
பாரில் பிள்ளைகள் இன்புறவே ஆக்குவோம்
போதுமே! மேன்மயம்! மெய்மரபுச் சொல்லிக்கொடுத்தே!     (16 அடி)

கற்றலில் விதைத்தால் பசுமரத் தாணியாம்
கல்விக் கூடத்தில் குப்பைகள் சேர்க்காமல்
பிஞ்சுகள் மனதில் பாலினக் கொடுமைப்
புகட்டாமல் பால்மனதில் நச்சுவிடம் ஊட்டாமல்
கேடுசெய் ஆசிரியர்கள் நீக்கிநல் ஞானம்
கொண்டோர் அறஞ்செய் கோவில்போல் மாற்றுவோம்
ரோஜா மலர்கள் நாளைய வாழ்வில்
ராஜா போல்நாட்டைக் காக்கநேர்! கொண்டாடுவீரே!            (24 அடி)
    - சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 13.11.2021.