Wednesday, February 24, 2010

‘முதல் குழந்தை’

மடல்வாழைத் தோரணம்
மாக்கோலப் பாமணம்!
தொட்டில் குழந்தை
தெய்வீகத் தேனினம்!
குலத்தோர் வாழ்த்தும்
குங்குமப் பூவினம்!
முதன்மை வாரிசு
முற்றிலும் கமழ்மணம்!
தத்தை மொழிகள்
தடதட நடையினம்!
சுட்டும் விழிகள்
சிலம்பு மொழியினம்!
கொழுத்தக் கன்னம்
கொஞ்சும் சுவையினம்!
விடியலின் சாயல்
வெற்றிலைக் கொழுந்தினம்!
மங்கலம் அருளும்
மதிவதன மானினம்!
சுந்தரம் சுதந்திரம்
சமநிலைப் பாலினம்!
திருவிற்கு உருவாகும்
திருஞானப் பிறப்பினம்!
இச்சை வரவேற்கும்
இளமுல்லைச் சிரிப்பினம்!
ஓடியாடிக் கவரும்
ஒளியானச் சேயினம்!
தடையின்றி இயங்கும்
தரணியின் அணியினம்!
மதிப்பு நல்கும்
மழலைச் சொல்லினம்!
சம்சார சம்பந்தம்
செழிக்க வருமினம்!
மலரும் மொட்டுகள்
மகிழ்ச்சி மழையினம்!
வாழ்வின் அர்த்தம்
வசந்த மெல்லினம்!
ஆண் பெண்
அடைமொழிப் பேரினம்!
வாரிசு இன்மை
வருத்தும் போரினம்!
மலட்டுத் தன்மை
முறிக்கும் பயனினம்!
முதல் முத்தம்
முதல் திருமணம்!
முதல் தொழில்
முதல் மூலதனம்!
முதல் தோற்றம்
முதல் திருவினம்!
பெருமை பெருமை
படியாகும் தலைப்பினம்!
கருவுயிர் சிதைத்தல்
கடுந்துயர் வாழினம்!
முதல் குழந்தை
முன்னின்றுக் காப்போம்!!!!

-அகிலமணி ஸ்ரீவித்யா.

No comments:

Post a Comment