"உடனிருந்த உத்தமத்தம்பி லட்சுமணன்"
வசந்த வாசல் - பன்னாட்டுக் கவியரங்கம்
(கம்பன் காட்டிய காப்பிய மாந்தர்கள்)
இணைய வழி - 26.12.2021, ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு
அமெரிக்கா - நேரம்: காலை 6.00 மணிக்கு
(1)
இராம அவதாரக் காப்பியத் தேரில்
இராமன் தம்பி இலக்குவன் இலக்குவன்
இராமனின் அடிபணிந்துத் தான்சேவை ஆற்றிட
இராம இலக்குவன் சகோதர மகிமையே!
(2)
இராமன் நிழலாய் தம்பி இலக்குவன்
இராமன் காட்டிற்குச் சென்றபோதும் நீங்காமல்
ராமன் கைத்தலம் பற்றியபோதும் நீங்காமல்
ராமன் சீதாராமன் என்றுதன் பிறவிவாழ்ந்தே!
(3)
தந்தை தசரதர் தாயவள் சுமித்ரா
தன்னுடன் பிறந்தோர் பரதன் சத்ருகனன்
தன்னுயிர் மனையாள் ஊர்மிளா நல்லுணவு
தன்சுகம் நித்திரை துறந்தான் இலக்குவனே!
(4)
அரக்கர் குலத்தை அழித்த இராமனின்
பரம்வீர வெற்றிக்கு காவலனாய் லங்கா
அரக்கிச் சூர்ப்பனகை மூக்கரிந்து இந்த்ரஜித்
சிரத்தை வீழ்த்தி இதிகாசம் தான்பதிந்தாரே!
(5)
இக்கோடு தாண்டாதே ஆபத்து நேருமென
அக்கறைக் கொண்டன்றுச் சீதைக்கு எல்லைச்சுட்டி
எக்கரைக் கடக்கவும் அண்ணனுக்கு நற்துணையாகி
தக்கநேரம் மாயமான் அஃதென்றுக் காத்தாரே!
(6)
முடிவில் மறுவுயிர்ப் பெற்ற இலக்குவன்
முடிசூடும் ராமனின் பட்டாபிஷேகம் வாழ்த்தி
முடிந்த இன்பமாய் கவரிவீசக் காப்பிய
முடிப்புகழ் உடனிருந்த உத்தமத் தம்பியடைந்தே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 25.12.2021.
Wednesday, March 9, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment