Saturday, November 13, 2021

 சூழ்ச்சி வலைகளில் சுற்றுச்சூழல்!

(டெல்லி தமிழ் இலக்கிய மன்றம்,
அமெரிக்க தொலைக்காட்சி, கோவை வசந்த வாசல்
கவிமன்றம், 42 நாடுகளின்  தமிழ்மொழி அமைப்புகள்)
(10.11.2021 - புதன் மாலை 5.00 மணிக்கு நிகழ்ச்சி)


                         (1)

ஐப்பசி மழையில் அருமை! நற்தலைப்பு!
அன்பே! விபத்தில் வீழாமல் இல்சேர்வோம்!
வல்லரசார் மேலரங்கில் இந்தியா தமிழ்நாடு
வல்லமைப் படைக்க உள்ளரங்கு உள்நிலை
வளர்ச்சி மாற்றம் திட்டமென கைகள்மாறி
உற்சாகம்  ஊண்உடை  உறைவிடம் தரும்இயற்கை
ஊறாகி வீழஉயிர்கள் வாழுமிடம் கீழித்தரமாகி
ஊட்டக்காற்று சுற்றுச்சூழல் கேடாகச் சூழ்ச்சிவலையே!

                            (2)

அய்யகோ!  கருமமே! உயிர்கள்  நிலைப்பது
அனலில் விழுந்தப் புழுவின் நிலையே
அனுதினம் தப்பிப் பிழைத்து வாழ்வது
அச்சம் உச்சம் எங்கும் எங்கெங்கும்
இன்பம்  துன்பம் காலம் அறியாமல்
இச்சை மனிதனோ சொத்துகள் குவிக்க
மலக்கழிவு சாக்கடை குடிநீர்க் குழாயுடைய
மேல்நடக்கும் கல்விமான் போதைக்குடிமான் நாறுதற்போலே!

                            (3)

வாய்விடும் புகையோ வாகனக் கரும்புகையோ
வான்வெளியை மாசுப்படுத்த மாஅழிவே! மாஅழிவே!
நீர்நிலைகள் தூர்வாரித் தூநதிகள்  ஒன்றிணைத்து
நீளுலகு வாழ்வின்றேல் பேரிடரே!  பேரிடரே!
சுத்தம் அசுத்தம் பாராமல் தூய்மைக்கேடு
செய்வோரைத் தண்டிக்காமல் குற்றங் குற்றமே!
பசுமரங்கள் வெட்டிவீழ்த்திப் பால்தரும் பசுக்கள்
பதிமடியச்  செவ்வாய்க் கிரகம்பாய்தல் சூழ்ச்சிவலையே!
      - சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா,  10.11.2021,கோவை.

No comments:

Post a Comment