Friday, November 20, 2009

திருவையாற்றில்!

சந்ததிகள் தந்தருளும் வையாற்றில்
சங்கீத மூர்த்திக்கு அபிடேகம்!
பலகோடி பக்தர்கள் கூடாரம்
பன்னிசைப் பாடல்கள் அலங்காரம்!
எத்திசை நோக்கிலும் ரீங்காரம்
எவரவரோ கோர்த்திடும் பூவாரம்!
இச்சகம் தளைக்கவே சாரீரம்
இன்னிசை மழையில் சங்கீதம்
திருநின்று அருளும் பாவாரம்
தியாகய்யர் பிரமோற்சவம் திருவையோரம்!!

No comments:

Post a Comment