Friday, November 20, 2009

தமிழ் பேச வா!

தமிழ் பேச துணிந்து வா!
தாய் மொழியை வளர்க்க வா!
தரணியை காக்க வா!

(அமுது. அமுது.. அமுது...
தமிழ் அமுது. அமுது.. அமுது...)

பல்லவி

எழுத்தினை பயில வா!
ஏக்கங்கள் அகற்ற வா!
ஏட்டினை காப்போம் வா!
ஏணியாய் வளர்வோம் வா! (தமிழ்)

அனுபல்லவி

காப்பியம் இயற்ற வா!
கற்பனை நிலவில் வா!
சரித்திரம் படைப்போம் வா!
சங்கமாய் முழங்க வா! (தமிழ்)

-அகிலமணி ஸ்ரீவித்யா

2 comments:

  1. ஏக்கங்கள் அகற்ற வா!
    ஏட்டினை காப்போம் வா!
    ஏணியாய் வளர்வோம் வா


    அன்புடன் வரவேற்கிறேன் சகோ:

    வாழ்த்துகள்

    ReplyDelete