Friday, November 20, 2009

நிழல் தேடும் மரங்கள்!

பரந்த உலகில் படர்ந்திருக்கும் மரங்கள்
பசுமை மாறாத நினைவுகளே நிழல்கள்!
நிலையான மரத்தில் கிளைகள் படர்ந்திருக்கு
நெடுநெடு வளர்ச்சியில் உண்மைகள் புதைந்திருக்கு!

முதிர்ந்த நெஞ்சத்தில் மின்சாரம் பாய்ந்திருக்கு
மின்வெட்டு வரும்போது பயனாகத் தானிருக்கு!
தடுக்கி விழும்போது தாயின் அரவணைப்பு
தளிர்கள் முதிரவே துணையாகும் நினைவு!

ஊர்க்கோடி மூலையில் பெற்றோர் காப்பகம்
உயிரணுக்கள் உலையினில் உல்லாச நினைவகம்!
தோளில் சுமந்து சுகமாகவே வளர்த்தேன்
சொந்தங்கள் கூடவே துணிவாகச் சேர்த்தான்!

கவலைகள் தீர்வதற்கு சொத்துகள் சேர்த்தேன்
காணாத காரணத்தால் சுகங்களைத் துறந்தேன்!
ஆசையும் ஆஸ்தியும் தன்னிடம் இருக்கு
ஆதரவு இல்லாமல் அனைத்திலும் வெறுப்பு!

மன்றாடி பேசுவது மனைவிக்குப் பொறுப்பு
மாதவன் செல்வத்துக்கு கடனாளி விரிப்பு!
திருமணம் ஆனதும் சுகமன்றோ போச்சு
திருந்தக் காத்திருகேன் காலமும் போச்சு!

படிப்பிற்கு வேலைகள் பாரினில் இருக்கு
பழியாமல் போனாலே குடும்பத்தில் இனிப்பு!
பசியாற என்னிடம் இருக்குதே உழைப்பு
பாதியை இழக்காமல் சேர்த்தாலே குவிப்பு!

அப்பப்பா போதுமே பெண்டிரின் பொல்லாப்பு
அத்தனையும் கொடுத்தாலும் பட்டினித்தான் இருப்பு!
தொலைவிருந்து நாள்தோறும் நான்பட்ட பாடு
தெரியாது சொன்னாலும் இவள்ராகம் பெரும்பாடு!

சுற்றங்கள் நீங்கியும் சுமைதானே சுமந்தேன்
சளிப்பாக இருக்குதே அருகாமை புகுந்தேன்!
சொல்லாம பிள்ளைக்கு செல்லமும் கொடுத்தா
சீர்கெட்ட பிள்ளைக்கு செல்வங்கள் தானளித்தா!

ஆடவர் நிலையும் அன்றாடம் தேயுது
அவரவர் தொல்லைகள் திசையெங்கும் பெருகுது!
இருவரும் சமமே விவாதம் வேண்டாம்
இன்பமாய் வாழ்வதற்கு சன்மானம் வேண்டாம்!

பிள்ளைகள் வளர்ச்சிக்கு நெடுந்தூரம் இல்லை
பாட்டாளி சேர்க்கிறான் அலங்காரப் பொருளை!
சடுதியில் முன்வரும் திட்டங்கள் இருக்கு
சேமிக்கும் ஓட்டத்தில் வருமானக் கணக்கு!

வசதிகள் பெருகவே உறவுகள் முறிவு
வண்டிகள் நூறு வேகத்தில் பிரிவு!
விபத்துகள் வாழ்த்தவே ஓடிடும் காலம்!
வாரிசுகள் தாங்குமா நீடித்த ஓலம்!

இயற்கை ஓட்டமே சீரான வாழ்வு
இல்லாத செயற்கை சீரழிக்கும் செலவு!
எண்ணச் சிறகுகள் நிழல்களின் கூடு!
எவ்வழியும் தேடிடும் மரங்களடர்ந்த காடு!!!!


- அகிலமணி ஸ்ரீவித்யா. 11/10/2009.

No comments:

Post a Comment