Friday, December 11, 2009

'தமிழ்ச் செம்மொழி'

தமிழனாக நில்லடா
தலை நிமிர்ந்துச் சொல்லடா!
எட்டுத் திக்குகள்
எங்கும் நிலைப்பது வேதமடா!
அன்னை அறங்கள்
அறிவுத் திறன்கள் ஓங்குதடா!
உலகத் தமிழர்
உண்மை நெஞ்சம் போற்றுதடா!
தமிழ்ச் செம்மொழி
செவியில் இன்பம் பாயுதடா!
இளந்திரை முதுநரை
இளையர் இயக்கம் ஆளுமடா!
எல்லை இல்லை
எதிலும் சாதனை கூடுதடா!
கற்றவர் மற்றவர்
கலந்தக் கரங்கள் எழுதுமடா!
பாரதி கனவுகள்
பண்பு நெறியைப் புகழுதடா!
வந்தே மாதரம்
வாழும் தமிழர் முழக்கமடா!
அறம் பொருள்
அருள் யாவும் வேணுமடா!
ஒன்றே சத்தியம்
ஒருமித்த தமிழ்மொழி ஆகுதடா!
நாடுகள் வட்டம்
நாளும் வாழ்த்திக் கூறுமடா!
எழில் மொழிக்கு
ஏழுலகு ஆசிகள் உறுதியடா!
மாத்தமிழ் மரபு
மலர்ச்சி அடைந்து வெல்லுமடா!
கலைஞர் உள்ளம்
கனிந்துப் பாக்கள் இயற்றுதடா!
இலக்கியப் புதுமை
இதயம் நுழைந்துத் துலக்குதடா!
செம்மொழி செம்மொழி
சிறப்புகள் தமிழை வணங்குதடா!!!!

No comments:

Post a Comment