கவிதைக் களத்தில் காப்பியக் கலித்துறை!
வியப்போ வியப்புக் கலித்துறைவிருந்
தாலே
விருத்தம்
முயற்சிக் கனிந்தே இனிநாளிலே
எழுத்தார்
எழுதா
பயன்கள் உளவோ கவிதைக்கள
உதித்தே
தொடர்ந்துக்
கயமைக் களைய நிதர்சனமொழி
வரைந்தே
அறிவீர்! (4 -
நெடிலடி)
தமிழர்க் கவிகள் அவையிலேகவி
தனித்து
அறிவோம்
அமிழ்தம் மதுரக் கவிஆசுமே
விகடக்
கவிமே
தமிழில் விரிவித் தரக்கவியுமே
கடவச்
சித்ர
நிமித்த வரையிற் பரவியேகவி
பெரும
யாத்தே! ( 8 -
நெடிலடி)
சிந்தா மணிமேல் இலக்கியமதி
நீங்கி
யிப்பா
இந்நாள் யெழுதி மலருதிநிதி
பாரும்
களமேல்
அந்நாள் யடுத்து வியந்ததைமறு
முறையும்
பாடி
எந்நாள் எவரும் யெழுதமேலினி
வாழ
வாழ்த்து! (12 -
நெடிலடி)
புலமேல் மறையும் இலக்கியமழைப்
புலத்தில்
தோன்ற
நலமேல் யதனைக் களங்காத்துமே
செய்து
நாளும்
நிலமேல் செழித்துச் சுவைமொழிக்கவி
வானில்
யானும்
வலமே வளர்த்துப் புகழ்ச்சாற்றியே
களத்தில்
விதைத்து! (16 -
நெடிலடி)
-சித்திரக்
கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா,
கோவை.
(குறிப்பு: கவிதைக் களத்தில் மிகுதியாக
எடுத்தாளப் படாமல் அருகும்
கலித்துறை வகையால்
இப்பாடல் எழுத்தப்பட்டுள்ளது.)
No comments:
Post a Comment