Sunday, June 20, 2021

 அவசரகாலத் தேவைக்குச் சேவையே!

(உருமாறிய கொரோனா 2)
(1)
பொதுமுடக்க நடைமுறைச் சிக்கல்கள்
புதியப்புதிய அறிக்கை மாற்றங்கள்
வாகனப் போக்குவரத்துத் தடைகள்
விதிமுறைக்கு தக்கவாறுத் தேவைகள்
நோயாளியர் சிகிச்சை அவசரங்கள்
நோய்ப்பிணி குணமாக்க மருந்துகள்
ஆக்சிஜன்
காற்று நிரப்பியக் கொள்கலன்கள்
யாவும் அவசரக்காலத் தேவையாகச் சேவையே!

(2)

முன்களச் செவிலியர்தம் முதலுதவி
முன்னிற்க மூச்சுத் திணறும்
நோயாளிக்கு பேருந்து ஆம்புலன்ஸ்
வாகனத்தில் கூடமுன் மருத்துவம்
செய்தனர் மகத்துவத் தன்னார்வலர்
செய்தநல் வயிற்றுக்கு உணவளித்தல்
சேவைத்தொடர
அன்றாட ஆற்றுப்பசிக்கு கைப்பணம்
அன்னதான மேற்பொருளை அன்றரசுச் சேவைதணித்தே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 05.06.2021.



p


அடைக்கலம் அரசளித்தே!
(உருமாறியக் கொரோனா வண்ணமே - 2)

(1)
காய்ச்சல் சளியைக் கடந்தோர்
காடுமலையில் பதுங்கியா வாழ்ந்தனர்
விந்தைதான் காடுகளில் வாழ்கின்ற
வீரமிருகமாம் சிங்கமும் புலியும்கூட
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்
கண்டுள்ளதை உறுதிசெய்து வைரஸ்போல்
கன்னாபின்னா
பேச்சலைமோத வண்டலூர்க் கூண்டுகளில்
பீதியில் சிங்கங்கள் கோபக்கண்கள் காட்டிச்சிவந்தே!

(2)
காட்டுச்சிங்கமோ வீட்டுச்சிங்கமோ காட்டின
கடுங்கோப உணர்வுகளை வெளிப்படுத்த
மனிதர்க்கு முகக்கவசம் மிருகத்திற்கு
முடிவுதான் எட்டவில்லை ஆய்விலே
முணுமுணுத்து மூன்றாமலை வெளிப்பட
மத்தியில் கறுப்புசிவப்பு மஞ்சள்பச்சை
பூஞ்சைகள்
தோன்றியதாய் பல்வேறு வைரஸ்நோய்
தாக்க அடைக்கலம் அரசளித்துக் காக்கமுயன்றே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 10.06.2021.

No comments:

Post a Comment