Thursday, June 3, 2021

வைதீக முறைப்படி புனித வேள்வியே!
இடம்: திருமலை ; நாள்: 31.05.2021.
நேரம்: காலை 6.00 முதல் இரவு: 11.00 வரை
நிகழ்ச்சி: சுந்தரகாண்டம் சம்பூர்ண அகண்டபாராயணம்

(1)

திருக்கோயில் கதவுகள் மூடியிருக்க
தினம்தினம் நோயாளியர் அதிகரிக்க
மனிதயினம் நோயினின்றுக் குணமடைய
மதிமழுங்கி அச்சத்தால் உறைந்தோர்
இறைவனிடம் முறையிட்டு ஆற்றவும்
இடமின்றித் துன்பநேரம் துடிதுடிக்க
திருமலைத்
திருப்பதியில் பல்வேறு வேள்விகள்
தொலைக்காட்சி வாயிலாகக் காணுமாறு மேற்செய்தே!

(2)

விந்தை விஞ்ஞானம் களவுவிதைக்க
விதியருள் ஆண்டவன் வினைதீர்ப்பாரென
வேண்டினர் திருமலையில் பெருமாளை
வேதவித்யா பீடத்தில் வேள்விகள்
பகவத்கீதை நெடுநாள் பாராயணம்
பரமாச்சாரியார் நல்லுரை நாமகீர்த்தனம்
ஒருநாள்
தவயாகமாகச் சுந்தரக்காண்டம் முற்றோதல்
தொல்லைதரும் நோய்க்கொரோனா தாக்கமறையப் பூசித்தனரே!
சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 01.06.2021.



No comments:

Post a Comment