1. நிழற்தரும் மரங்கள்
நம்மக்களே!
(1)
பச்சைப் பசேலென வயல்கள்
பசுமை மரங்கள் படருங்கொடி
இலைகள் வண்ணப் பூக்கள்
இன்வாழைக் கீரைவளர்த் தென்னை
வுடையவூர் நடுவே தூண்கள்
வூன்றக்கோல் வீடுகள் வரவேற்க
வூராரும் வல்லுலகோரும் நல்வுறவாக
உன்னதக் குடும்பமாய் வாழ்ந்தனர் - நம்மக்களே!
(2)
வளர்ந்த வளர்ச்சிக் கூறுகளால்
வளைந்த மரபுக் கூடுகள்
வளர்ந்தத் தேசம் பயணிக்க
வளரும் வளமை வலியாக
வறட்சி வறுமைச் சீராக
வசந்தக் கல்வி விதையாக
வரிந்தக் கணிணி மதியாலே
வுச்சப் பண்பாடு மாற்றத்தால் - நம்மக்களே!
(3)
வரவேற்பா வாழ்த்தா மனமில்லை
வருவது வரட்டும் ஒளியில்லை
வுழைப்பு வுழைப்பு நேரமில்லை
வுண்ணா விரதம் நோன்பில்லை
வுயர்வுத் தாழ்வுப் பேதமில்லை
வுலகப் போக்குத் தெரியவில்லை
வரவும் செலவும் புரியவில்லை
வுண்மை நிழற்தரும் மரங்கள் - நம்மக்களே!
-சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா,
கோவை.
No comments:
Post a Comment