5. பாதுகாப்புக் கட்டாயமே!
(1)
கர்ணன் அணிந்துக் கொண்டக் கவசமோ
கவலைத் துன்பம் போக்குங் கவசமோ
கொரோனா வைரஸ் கிருமித் தொற்றாமல்
காக்கும் கவசமே கவசம் கவசம்
கட்டாயச் சட்டம் கொடுத்தக் கவசமிது
கந்தல் அணிவோர் முதலாகக் கோட்டை
ஆள்வோர் வரையில் யாவரும் அவரவர்
ஆசைத் துறந்து முகக்கவசம் மாஸ்க்அணிந்தே!
(2)
இல்லமோ அலுவல் இடமோ எதிலும்
இந்நோய்ப் பரவாமல் பாதுகாக்கத் தூய்மைப்
பணிக்குச் சானிடைசர் மேற்தெளித்துக் காலுறைக்
கையுறை இடைவெளி எச்சரிக்கைக் கொண்டே
விழிப்பாக மக்களினம் தெள்ளணிந்து நல்லன
வகுத்துப் பாடங்கள் கற்றுக் கொள்ள
தேசம்விட்டு தேசம் மாநிலம்விட்டு மாநிலம்
தேவைக்கு மட்டுமே சென்றுவரக் கற்றனரே!
(3)
தூரம் தூரம் என்பறந்து என்செய்ய
துன்பம் எங்கும் பற்றித் தேய்க்க
உலகம் கற்றுத் தந்தப் பாடத்தில்
உண்மை உன்னதம் உறவுகள் யாவும்
நொடியிற் புரிந்து மரபிலே கூடினர்
நோயற்ற வாழ்வே குறைவற்றச் செல்வமென
பாராளும் சீமானோ மற்குடியோ நோய்க்குப்
பார்மருந்துப் பாதுகாப்பு பாதுகாப்பு தேடியே!
-சித்திரக்
கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 28.06.2020.
No comments:
Post a Comment