Tuesday, January 26, 2021

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 8)

 

8. கோவிட் 19 - புனிதம் எங்கே!

 

         (1)

கோவிட் பத்தொன்பது கொரோனா

கோவில் வழிபாட்டுத் தலங்களை

விட்டுவிட வில்லை நோய்க்கு

வேண்டுதல் செய்துப் புண்ணியங்

காண்கும் பக்தர்மேற் தொற்றக்

கோவில் நடைகள் சாத்தின

      எங்கோ

புனிதம் இருளில் இறைவன் சன்னதியே!

 

            (2)

 

திருக்கோவில் தேவாலயம் கோட்டைமசூதி

திருத்தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி

ஆர்ப்பரிக்கும் கடலலை யிசைராகம்

ஆர்வலர்கள் கேட்காமல் மதிவேகம்

கட்டுக்குள் அடங்காமல் மனிதநேயம்

கடந்தாசைக் கூடிகூடியே இதயந்தேய

      தீயொழுக்கம்

மண்ணின மக்களைத் துண்டாக்க கொல்நோயே!

 

            (3)

 

கட்டுப்பாடு தளர்வுகள் வந்தாலும்

காணாத தளர்வுதான் வழிபாட்டில்

முறைமைத் தவறாது முன்னேற

மறையும் பிணிகள் மெய்யாக

அஞ்ஞானம் விஞ்ஞானம் மெய்ஞானம்

அன்பகத்தைச் சிதைக்கா வண்ணம்

      ஆன்மிகப்

பாதையில் நன்கொளிர வைரஸ்கொரோனா தானழியுமே!

            -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 29.06.2020.

 

 

No comments:

Post a Comment