Tuesday, January 26, 2021

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 10)

 

10. சமூகத் திருமணமும் விழாவும்!

(கொரோனா நோய்க்காலம் - முன்னும் பின்னும்)

 

                  (1)

 

அவசரக் காலத்தில் அன்றாடக் கொண்டாட்டம்

அன்பே இல்லை இல்லை

ஆண்பாதி பெண்பாதி

ஆடலும் பாடலும் விமரிசைத்

திருமணம் நடக்கவே இல்லை

முன்செய்த நிச்சயம் தள்ளிப்போக

முன்னும் பின்னுமாய்

சமூகத் திருமணம் திருமணம் திருமணமே!

 

                  (2)

 

திருமண மண்டபம் கோவில் அனைத்துமே

தள்ளின தள்ளின விழாக்களை

மகாகும்ப நன்னீரோ மாசக்தி

வேள்வியோ கொண்டாட்ட

நாளோ இல்லை இல்லை

வழிபாடு வித்தை கலைகள்

வசந்த உற்சவம் யாவுந்தடையே

தேரோட்டம் தெப்போட்டம் காண்போரும் இல்லையே!

 

                  (3)

 

கூட்டமாய் மக்கள் சேர்வதும் இல்லை

சோர்வாய்ச் சாய்ந்து உறங்கவும்

இல்லை இல்லை

துள்ளலாய்ப் பண்டிகை விழாவும்

புண்ணிய யாத்திரை மேதியுலா

இல்லை போகவரச் செய்பணிச்

செய்தே அகமோ புறமோ

சிலையாய் சிந்தனைச் சவமாய் வாழ்ந்திடவே!

      -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 30.6.2020.

No comments:

Post a Comment