11. பெண்டிரின் புகழே!
(1)
இன்பமோ துன்பமோ புகழுருப் பெண்ணே
இன்னற் காலத்தில் இல்லத்தில் பேரொளி
மழலையர்ப் பேச்சுக்குத் தேன்குரல் எதிரொலி
மட்டிலா மகிழ்ச்சி மக்களுக்குச் சேர்த்தே
நித்தமும் காண்பாள் நிறைமதி நிம்மதி
நிழலாக வீட்டிலே முழுமையும் காப்பாள்
சமையற் செய்துமே நற்சுவைக் காப்பாள்
சுகத்துடன் குடும்ப நலமே வாழப்புகழே!
(2)
நோய்க்கால மாமருந்து அன்பவள் கருணை
நோய்விலக வைத்தியம் பேருதவிப் பாரிலே
சிக்கனம் கண்ணியம் காத்தனர்ப் பெண்டிர்
சிற்சில மூலிகையில் நீராவி வைத்தியம்
கொரோனா வைரஸ் தாக்கா வண்ணம்
கொடுங்கோல் வறுமை மாய்க்கா வண்ணம்
தன்னுழைப்பு நல்கியே செவிலியர்த் தாயாகி
தன்னுடன் பல்லோரின் நல்லுயிர்க் காத்தே!
(3)
அங்காடிச் சந்தை அலுவலகம் தாண்டியே
அனுதின வரிகளும் இரட்டிப்பு ஆகிடத்
தயங்காமல் தன்குடும்பத் தேரினை நாளும்
தள்ளாமல் ஓட்டினள் தூமலர் ஆகினள்
துகில்தரும் பெண்மணி துயரறுப் பெண்மணி
தெள்ளமுதப் பெண்மணி தேசியப் பெண்மணி
பலகாலச் சேவைக்குப் பொன்னாரம் சூட்டியே
பெண்குலம் வாழ்த்துவம் புகழொலி வாழ்கவே!
-சித்திரக்
கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 30.06.2020.
No comments:
Post a Comment