7. கல்வியும் கேள்வியும்!
(1)
விழித்திரு விலகியிரு வீட்டிலிரு என்ற
விதிமுறைத் தொடரப் பள்ளிகள் கல்லூரி
பல்கலைக் கழகங்கள் பன்னிசைக் கூடங்கள்
பற்பலவும் மூடப்பட்டு மாணவர்கள் இல்லடங்க
செய்வது அறியாமல் பெற்றோர்தம் வேலைகள்
பாரமாகி இன்னலால் கேள்விகள் எழுந்தன
எந்நாள் இந்நிலை மாறுமோ
அந்நாள் விரைவில் வாராதோ மாற்றமே!
(2)
துள்ளல் நடையில் எழுந்து விரைவில்
தத்தம் கடமை முடித்துத் தனியார்
வகுப்பில் பயின்றுத் தேர்வில் வெற்றியை
விதைக்க நினைத்துக் காரியங் கெடமேல்
யாவரும் பொதுநிலைத் தேர்வில் வாகையர்
யாவரும் வாகையர் என்முடிவு யேற்க
அறிவும் அறிவியலும் யெங்கே
அன்றாட வாழ்வில் கொரோனா தாக்கமே!
(3)
அடுத்து அடுத்து விடுமுறை மகிழ்ச்சி
அளித்ததோ இல்லையோ ஆர்வமாய் இணையம்
கல்வியை வளர்த்துக் காட்டின அனலாய்
கணிணிமுன் காந்தக் கண்கள் சிவக்க
கவலை மனவழுத்தஞ் சேர்ந்து வல்லரசு
கற்பனைக் கனவாக மாயமோ ஞானக்
கணைகள் நுரையீரல் தாக்க
கருப்பு வெள்ளைத் திசையிலே கொரோனாவே!
-சித்திரக்
கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 29.6.2020.
No comments:
Post a Comment