Tuesday, January 26, 2021

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode -12)

 

12. சுதந்திர இந்தியாவும் சுடராதோ!

 

                  (1)

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வணங்கி வான்புகழ் வாழ்த்துவோம்

இயற்கை அரண்கள் இன்பம்

யாவையும் காப்போம்

பசுமை பசுமை பார்ப்புகழ்

வோங்க உழைப்போம்

மேலை உலகோர் வியக்க

மேதியில் வளமை வென்று வாழ்த்துவோம்!

 

                  (2)

 

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வணங்கி வான்புகழ் வாழ்த்துவோம்

தொழிலில் நுட்பம் கற்றே

தொல்லை யாவும் அழிப்போம்

துளைக்கும் துன்பம் துரத்தி

துரிதப் பணிகள் ஆற்றுவோம்

கற்போம் கொரோனா பாடம்

கடமைக் கடவுள் போற்றி வாழ்த்துவோம்!

 

                  (3)

 

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வணங்கி வான்புகழ் வாழ்த்துவோம்

இந்திய நாடு ஒன்றே

இருகரங் கூப்பு நன்றே

முன்னிரும் போர்கள் விலக்கி

முன்னேற்றப் பாதைத் துணிந்து

மக்கள் நலனிற் கலந்து

மண்ணின் மரபுக் காத்து வாழ்த்துவோம்!

            -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 30.6.2020.

No comments:

Post a Comment