6. மருத்துவமும் காவலும்!
(1)
வைரஸ் கொரோனா நோய்க்கான மாமருந்து
வையத்தில் இல்லை இல்லை
வானத்தில் உள்ளதோ
ஆய்விலே அறிவம்
வாழ்நாள் வரையில் தொடர்ந்து
வருமோ தடுப்பூசி இன்றியே
வாழ்க்கை எப்படி வாழ்வது
வாழ்பவர்க் கண்டே வாழ்வைக் கற்கவே!
(2)
ஆயுர்வேதம் ஆங்கிலம் சித்தா வைத்தியம்
ஆனாலும் தன்கவனம் தேவை
இருமல் தும்மல் தொண்டை
வலியுடன் காய்ச்சல்
மூச்சுத் திணறல் வந்திடக்
கொரோனா பி.சி.ஆர் டெஸ்ட்டும்
சோதனைச் செய்தலும் நன்றே
பரவும் பரவும் நோய்தான் மானுடரே!
(3)
கடமை என்றால் கசப்பா இனிப்பா
கடந்துச் செல்லும் மருத்துவத்
துறையும் காவற் துறையும்
துரிதமாய்ச் செயற்பட
பகலும் இரவும் சான்றே
பட்டமும் சட்டமும் ஊக்குவிக்க
பந்தமும் சுற்றமும் நலமுற
எந்நாளும் நன்நாளாய் சேவைக்குச் செயமே!
-சித்திரக்
கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 28.06.2020.
No comments:
Post a Comment